Friday, June 25, 2010

காத்திருக்கிறேன்

முற்றத்தில் அமர்ந்த
காகம் சொன்னது,
நீ விரைவில் வரும் செய்தியை!
நீ நாளை வருவாய்
என்று சொன்னாலும்,
அவ்வளவு நேரமா என்று
பதறும் என் உள்ளம்;
இப்படி எத்தனை நாளைதான்
நான் எண்ணிக்கொண்டிருப்பேன்
உன் வரவை…..
காகம் சரியாக சொன்னதா அல்லது
நான் தவறாக புரிந்துகொண்டேனா,
தெரியவில்லை,
ஆனால் காகம் மட்டுமல்ல…
யார் கதவை தட்டினாலும்
நீயேதான் இருப்பாய் என்று
ஓடி வருகிறேன்….
என்றாவது நீ வரும் நாளன்று
களையிழந்து விடுவேனோ

என்றே வருந்துகிறேன்!

No comments:

Post a Comment