நட்சத்திரக் கூட்டத்திடையே
ஒற்றை நிலவாய்
என்றும் தனிமையில்
உணர்வில் நேச நெருக்கம்
நேர்ந்திட
நதி நீரில்
"நான்" தொலைந்து நீயாகியிருக்க
உனக்கு தெரியாமல் போன
என் முகம்
உன்னால் தொலைத்து விடமுடியாத
"நான்"கள்
நீர் பிடித்து தூக்கித்
தாகம் தீர்த்த
பச்சை மண் பானைகளோடு
கரைத்துப் போனது
என்
கனவுகளையும் சேர்த்து
வனைய முடியாமல் போனதற்காய்
வாளேந்தும் பரசு ராமர்கள்
காதலில்
களைந்து விடும் "நான்"கள்
சாத்தியமாக
மண்ணிலென்ன
கண்களறியா காற்றில் கூட
நீர் பிடித்து வருதல்
கை கூடிவரும்
உனக்கும் எனக்கும்..
No comments:
Post a Comment