காதலித்துப்பார்.....
ஆயிரமாயிரம் வார்த்தைகள் தோன்றும்
அவற்றின் பொருளை நீயே அறியாய்
காதலித்துப்பார்.....
ஏதேதோ எழுத நினைப்பாய் - அவை
அனைத்தையுமே மறப்பாய்.....
ஏதேதோ எழுதி விட்டு
அவற்றை கவிதை என்பாய்....
காதலித்துப்பார்.....
யாவற்றையும் ஏன் உன்னையே - நீ மறப்பாய்
அவளையே சதா நினைப்பாய்...
அனைவரையுமே வார்த்தையால் எரிப்பாய்
அவள் எரிந்து விழுந்தாலும் - உன்னில்
அதையும் - நீ ரசிப்பாய்..
காதலித்துப்பார்.....
No comments:
Post a Comment