"காதலின் அர்த்தமே தெரியாது"
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்களே மறுத்தன
நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.
விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது
பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது
கைப்பேசி கடவுளானது
கடிகாரம் எதிரியானது
நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக
இருவருக்குமே
எத்தனை ஆசை!
Thursday, October 28, 2010
நீ....
உன்னிடம் சண்டையிட ஆசை
ஆனால் நீ விழிகளிலேயே
சமாதானம் பேசுவாய்....
உனக்காக காத்திருக்க ஆசை
ஆனால் எனக்கு முன்னமே நீ
பூத்திருக்கிறாய்
உனக்கு பிடித்ததை பரிசளிக்க ஆசை
என்ன செய்வது?என்னைதானே
உனக்கு மிகவும் பிடிக்கும்
உன்னை மிக நேசிப்பதாய் நினைப்பேன்
ஆனால் நீ என்னையே
முழுவதுமாய் சுவாசிக்கிறாய்!!
ஆனால் நீ விழிகளிலேயே
சமாதானம் பேசுவாய்....
உனக்காக காத்திருக்க ஆசை
ஆனால் எனக்கு முன்னமே நீ
பூத்திருக்கிறாய்
உனக்கு பிடித்ததை பரிசளிக்க ஆசை
என்ன செய்வது?என்னைதானே
உனக்கு மிகவும் பிடிக்கும்
உன்னை மிக நேசிப்பதாய் நினைப்பேன்
ஆனால் நீ என்னையே
முழுவதுமாய் சுவாசிக்கிறாய்!!
Wednesday, October 27, 2010
கல்வெட்டுக்கள்..
உளிகள் இல்லாமல்
வலிகளால்
செதுக்கப்படும்
கல்வெட்டுக்கள்..
இதயத்தில்
அவள் நினைவுகள்....
வலிகளால்
செதுக்கப்படும்
கல்வெட்டுக்கள்..
இதயத்தில்
அவள் நினைவுகள்....
தெய்வத்தாய்
அம்மா! உன்னை
கடவுளோடு ஒப்பிட்டால் நான்
ஏற்க மாட்டேன்
"கடவுள்"
கல்லில் செய்த
உருவம்!
என் "அம்மா"
பொறுமையில்
செய்த தெய்வம்!..
--ஜெ.ரேவதி
கடவுளோடு ஒப்பிட்டால் நான்
ஏற்க மாட்டேன்
"கடவுள்"
கல்லில் செய்த
உருவம்!
என் "அம்மா"
பொறுமையில்
செய்த தெய்வம்!..
--ஜெ.ரேவதி
Subscribe to:
Posts (Atom)