Thursday, May 27, 2010

வெற்றி

நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்  
தோல்வி தான் அடைந்திருப்பாய்...


நீ
தோற்று போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்...

உணர்ந்துகொள்
நீ
தோல்வி அடைந்தது வாழ்கையில் அல்ல
புரிதலில்......

Inspiring Thoughts

Wednesday, May 26, 2010

தாலாட்டு

கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்க வில்லை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......

ரயிலின் காலி சீட்டை-நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....

நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......

கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........

என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....

கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே...

கண்ணீரே

நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....

ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....

திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ..
 

தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போனேனே  ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........

அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....

அழைக்காது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்

மாறியது யாரோ ?

மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......

வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............

மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?

மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்....

தராசு

உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......

அன்பை நிர்ணயிக்கும் .......
நியாயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........

ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்

தீ...

பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............

பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........

கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............

வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........

பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........

அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........

காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............

நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............

இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........

சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........

மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........

அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது...

மழைக்கு தெரியுமா ?

குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......

ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......

நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....

எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....

அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......

எத்தனையோ பேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......

நட்பை தேடும் நண்பரின் குரல்

குழந்தை பருவத்தில் .....
சிரித்து விளையாட -கிடைத்தது .....
தெருவிலும் உறவிலும் பல நட்புகள் .......

பள்ளியில் பேசி பகிரவும் .......
விளையாட போட்டிபோட -என ......
கிடைத்தது பல நட்புகள் .....


எதிர் காலதிட்டங்களை ......
பகிர்ந்து கொள்ளவும் .....
பருவத்தையும் உணர்ச்சிகளையும் ....
கொட்டி தீர்க்கவும் -கிடைத்தது ....
பல நட்புகள் கல்லூரியில் ......

ஆர்குட்டில் வரும் நட்புகளோ ......
தினமும் வணக்கம் நலமா ?
என்ற விசாரிப்புகளோடு சரி .....
மீறி எண்ணங்களை பகிரலாம் என்றால் .....
மனம் வரவில்லை எனக்கோ ......
ஏன் என்றாலோ ஊர் வேறு ....
பேர் வேறு ஆள்வேறு -மாற்றி ......
மாற்றி இரண்டு மூன்று பெயரில் ......
ஒருவரே நண்பராக உலா வருவதாலும் ...
புது புது நண்பர்களை மாற்றுவதாலும் .....
இது ஒரு மாயை என தோன்றுகிறது - எனக்கு ....

நட்பு என்பது தானாக வருவது .....
தானாக கேட்பது .....
தானாக உதவுவது .....
தானாக அறிவுறுத்தி திருத்துவது .....

பெற்றோர்களிடமும் உடன் பிறந்தவர்களிடமும் ....
பகிர முடியாத விசயங்களை ......
சொல்ல முடியாத இன்ப துன்பங்களை ....
மனம் விட்டு பகிர .....
உண்மையான நட்பு வேண்டும் எனக்கு ......
அந்தந்த பருவத்தில் வந்த நட்புக்கள் ....
அப்போதப்போதா மறைந்து விட்டது .....
இறைவா என் இடுகாடு பயணம் ....
தொடரும் முன்பாவது எனக்கொரு .....
உண்மை நட்பை தரவேண்டும் எனக்கு -நீ ...

என் நட்பு.....

உண்மை நட்பென்பது ......
கோபம் மறந்து வந்தாலும் ....
கோபத்துடன் பிரிந்தாலும் ....
தானாக சென்று சேர்வது ....

இல்லையோ கோபம் மறந்து வந்த நட்பை ...
உதாசீன படுத்துவதும் ....
வேதனையான நட்பு தான் .......

உனக்கு இருக்கும் ரோசம் ....
எனக்கும் உண்டு எப்போதும் ....
உண்மை நட்பானவன் எப்போதும் ....
என்றுரைத்த வார்த்தை ....
இன்று காற்றோடு கரைந்ததோ ....
இனி -எப்போதும் நீயாக வராது ....
உனக்கு தொல்லை தராது ....
என் நட்பு.....

நான் செத்து போனேனடி பெண்ணே!

கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உன் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!

எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!

நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????

மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!

புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!

என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????

கடைசிவரை உன்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????

செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே

உறவுகள்

அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்

அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்

அம்மா அப்பா பிள்ளைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்

கணவன் மனைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்

நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்...

உண்மை காதல் ..................

1) மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ..................

2) வெற்றி பெற்றவனுக்கு
காதல் ஓரு மைல் கல்
தோல்வி உற்றவனுக்கு காதல்
ஓரு நிணைவு சரித்திரம் !!!!!!!!!!!!!!!

3) மனம் காற்றாடியாய் அலைந்தாலும்
பறவையாய் இறக்கை கட்டி பறந்தாலும்
கல்லறையே முடிவு என்றாலும்
கால் கடுக்க காத்து கிடப்பது
உண்மை காதல் ..................


4) கல்லடி பட்டு சிதறினாலும்
கண்ணாடியின் எல்லா துண்டுகளிலும்
பிம்பங்கள் பிரதிபலிப்பது போல்
இறப்பின் எல்லை வரை
எந்நிலையிலும் மின்னி மறைவது
உண்மை காதல் ..................

5) கண்ணா மூச்சியாய் காலங்கள் கடந்தாலும்
கடல் ஆழம் போல்
எல்லை காண முடியாது
நினைவலைகளாய் மனதில்
அலைபாய்ந்து ஒளிந்து கொள்வது
உண்மை காதல் ..................

பிரிந்த நட்பும் காதலும்

பிரிந்த நட்பும்
பிரிந்த காதலும்
பல நாட்களோ
பல வருடங்களோ கழித்து
நமை கடந்து போகையில்
இதயத்தின் எல்லையில்
ஒளிந்திருக்கும் நினைவுகள்

உணர்வுகளால் உந்தப்பட்டு
இருவரையும் திரும்பி பார்க்க சொல்லும்
அது -நமக்குள் பிரிவு இல்லை
உண்மையான நேசம் என உணர்த்தும்..

என் நட்பு

நீ தேடும் நபர் இல்லை -என்று
ஓரு வரியில் உன் விரல்கள் சொன்னாலும்
அதை உன் மனம் சொல்லவில்லை -என்று
எனக்கு எப்போதும் புரியும்

நிறம் மாறாத பூவை -போல்
நட்பின் குணம் மாறது
நட்பின் சுவாசத்தை உணர
நீண்ட நாள் காத்திருக்க -நான்

நீயோ ஒற்றை வரியில்
பல நாள் கழித்து வந்து
வண்ணம் மாறும் பட்சோந்தி போல்
நீ தேடும் நபர் நானில்லை -என்று
உன் விரல்கள் சொன்னாலும்

மனம் வருந்தியது முதலில்
பிறகு இதுவும் நன்மைக்கோ என
நட்பில் ஏமாந்தவர்கள் வரிசையில்
நானும் இப்போது நன்றி

என் இனிய தமிழ் மொழியே!


என் இனிய மொழியே
என் இதயத்தின் ஒலியே
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...
உனக்கு
அதிகமான
கவனிப்புத் தேவைபடுகிறது
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

எல்லோரும் உன்னைக் கடந்து
சென்றுவிடுகிறார்கள்
உன் சிறந்த சொற்களை
நீ
சுவைப்பதில்லை
வேற்று மொழி
மருந்திலேயே
வீக்கம் கொள்கிறாய்
அசைப் போடுவதே
உன்
அன்றாட வேலையாகிவிட்டது
முன் பிறந்தும்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
பின்னவள் ஹிந்தியோ
பெரியவளாகிப் போனாள்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
ஊனமுற்றவர்
ஓட்டப் பந்தயத்தில் மட்டும்
முதல் பரிசு
உனக்கு
ஊனம்
உன்னில் இல்லை
உன்னைச் சுமந்தவர்
நெஞ்சில்
கன்னித் தமிழே
கவிதைச் சோலையில்
கதையில்
காணும் நாடகத்தில்
உன்
புன்னகையே
உன் இதழ்களை
அலங்கரிக்கட்டும்
அந்நிய சாயப் பூச்சு
வேண்டாம்
சொந்தப் பூவையேச்
சூடிக்கொள்
வண்ணங்கள் கலக்கலாம்
எண்ணங்கள் கலக்கலாம்
உன் சுவடுகள்
கலைக்கப்படாமல்
காப்பாற்று...

தொடர்வேன் என்றும்

சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன்

உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்

என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடும்
பாவையே

நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை....


தொடர்வேன் என்றும்

Monday, May 24, 2010

அம்மா ....

அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை
வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,
இனி
யாராலும் தர முடியாது..அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??

நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...

அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!

தலைவணங்குகிறேன் அம்மா..!

ஒற்றை வார்த்தையே
ஒருகாலத்தில்
உச்சரித்து
சொல்ல தடுமாறி
உளறிய
என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து
வெளியே
தடுக்கி விழுந்து
தாறுமாறாய்
வெடித்து சிதறிய
வார்த்தைகளால்
உன்மனதை
சுக்குநூறாய்
உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட
உதிர்க்காமல்
ஊமையாகவே
இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான
மரண தண்டனைதான்..!

நான்
கோபப்பட்டு
கடுஞ் சொற்களை
தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம்
எடுத்து வீசியும்கூட
என்மீது
மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே..?

உன் துக்கம்
பலவற்றில்
நான்
பங்குகொள்ளவில்லையே
நீ கதறி அழுத
பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லையே
அப்படியிருக்க
நீ மட்டுமெப்படி
என் சிறு துளி
கண்ணீருக்கும்
படபடத்து
ஏன்
ஒப்பாரி வைக்கிறாய்..?

நான்
வெற்றிபெற்ற
வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாய் சொன்னாய்
நான் தோல்வியுற்ற
வேளைகளில்
வேறு யாரைவது
தேடிபிடித்து
அவர்கள்மீதல்லவா
பழிபோடுகிறாய்
ஏன் அம்மா..?

உன்னை
சிரிக்கவைக்க
நான்
எந்தொரு
சிறு முயற்சி கூட
எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி
முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு
வந்துவிடுகிறது..?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
உடம்பு ஏறிவிட்டதென்று
வினவியதை
கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
இப்படி இளைத்துவிட்டாயேயென்ற
உன் வாய்மொழி கேட்டு
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல்
தேய்பிறை போல்
தோன்றுவதன்
அர்த்தமென்ன
என் முழுநிலவாய்
நீ இருப்பதாலா...?

நீ
சாப்பிட்டாயா
என்று கேட்குமுன்னே
சீக்கிரம் வந்து
சாப்பிட சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு
பசியென்ற ஒன்றை
இறைவன்
கொடுக்கவில்லையா..?

நான் உண்டுவிட்டால்
உன்பசியும்
மறைந்துவிடுகிறது
உன் மனதும்
நிறைந்துவிடுகிறது
இது எந்தொரு
அறிவியலிலும்
இந்த உண்மை
நிரூபிக்கப்பட வில்லையே..!

உன் பாசம்
என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன
என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே..!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி
போய்விட்டதென்ற
இந்த உண்மையை
உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன்
அம்மா..!

என்ன செய்தாய் என்னை..!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி...

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி...

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி....

நீ என்னுடன் தான் இருக்கிறாய்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்.

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன...

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்.

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

வெற்றியின் ரகசியம்!...

சாதிக்க பிறந்தவன்தான்
மனிதன் என்றான்

முயற்சித்து தோற்றுபோனேன்....

தோல்விதான் வெற்றியின்
முதல்படி என்றான்

படியேறி தோற்றேன்...

முயன்றால் முடியாதது
இல்லை என்றான்

முயன்று வெற்றி பெற்றேன்...

என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்,

புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!.....

நானும் பூமியே!

நீ சூரியன் என்று மாறிவிட்டாய்…

பூமியாய் எப்பொழுதும் உன்னையே

சுற்றிச் சுற்றி வருவதே

எனக்கு போதுமானதாக இருக்கிறது !

உன்னை நெருங்கவும் முடியாமல்

விலகவும் இயலாமல் ஒரு

எண்ணக்கோட்டுக்குள் அந்த

எல்லைக்கோட்டுக்குள்

உனையே சுற்றி வருகிறேன் !

பள்ளிக்கால கனவுகள்...

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...

அவள் நினைவாக...

முதன் முதலில் என் மனதை

தொடமால் தொட்டு

சரித்து விட்டு...



உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து

சென்ற அந்தநாள் ...

இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்

தொடர்கின்றன...

நல்ல பெயர்...

நானும் பெயர் எடுத்திருந்தேன்
நல்லவன் என,
உன்னுடன் பழகும் முன்பு....

இப்பொழுதும் பெயர் எடுத்திருக்கிறேன்
கல் நெஞ்சக்காரன் என,
உன்னை விட்டு விலகிய பின்பு....

சரியோ தவறோ
நான் நானாகவே இருக்கிறேன்....