சாதிக்க பிறந்தவன்தான்
மனிதன் என்றான்
முயற்சித்து தோற்றுபோனேன்....
தோல்விதான் வெற்றியின்
முதல்படி என்றான்
படியேறி தோற்றேன்...
முயன்றால் முடியாதது
இல்லை என்றான்
முயன்று வெற்றி பெற்றேன்...
என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்,
புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!.....
Nice
ReplyDelete