Friday, June 11, 2010

எத்தனை ரணம் என்னுள்

சில நொடிகள் வாழ்க்கையை மாற்றிவிடும்
அது உண்மைதான்,
அவளைச் சந்தித்த பொழுதுகள்
என்னை முற்றிலும் மாற்றிய தருணங்கள்
எரியும் நெருப்பில்
எரியும் விறகாய்
எரிந்தபடியெ நான்!
இன்னும் எத்தனை காலம்
இந்த சோகம்?

நான் மட்டும் எதை தேடினாலும்
தேடும் பொருள் அருகில் இருந்தும்
தேடியபடியே தான்
என் தேடல்கள்
எதில் முடியும்
எனி நான் பேசப்போவதில்லை
என் வார்த்தைகள் யாவும்
சுவற்றில் மோதிய பந்தாய்
இந்த வலி கொஞ்சம் கொடுரமானதுதான்
எத்தனை ரணம் என்னுள்
இருப்பினும் இதை ரசிக்கிறேன்
அவளை நினைக்கிறேன்
என் ரணத்திற்கு அதுதான் மருந்து....

2 comments:

  1. சில நொடிகள் வாழ்க்கையை மாற்றிவிடும்
    அது உண்மைதான்,
    அவளைச் சந்தித்த பொழுதுகள்
    என்னை முற்றிலும் மாற்றிய தருணங்கள்
    எரியும் நெருப்பில்
    எரியும் விறகாய்
    எரிந்தபடியெ நான்!
    இன்னும் எத்தனை காலம்
    இந்த சோகம்?



    superb partner...

    ReplyDelete
  2. ப்ச் கொல்றீங்களே !

    ReplyDelete