உன் மீது பித்தனாக இருந்தபோது
எல்லாம் நீ உணரவில்லை
ஆனால் இன்று புத்தனைப் போல
போதனைகள் சொல்கிறாய் என்னிடம்
எதிர்பார்க்காதே என்று...
வருடங்களில் வாழ்ந்துவிட்டேன்
உன் அன்பான பேச்சில்
நொடிகளில் இறக்கிறேன்
இன்று எனக்கு நீ இல்லை
என்று நினைக்கும் பொழுது...
நீ வரும் நேரத்தை எதிர்பார்த்து
என் நேரத்தை எல்லாம் கரைத்து
காத்திருப்பேன்
நீ வரும் வீதியில்..
எனது பார்வை எல்லாம்
உன் திசைநோக்கியே !
நாள் முழுக்க நான் சேகரித்த
வார்த்தைகளை சொல்ல
உன் அருகில் வரும்போதெல்லாம்
மறுபிறவி எடுக்கிறது மரணித்து
எனது காதல.........
எங்கேயோ இருக்கும்
முகம் பார்க்காத ஒருத்தனுக்கு
மாலையிடக் காத்திருக்கிறாய்
உன்னையே எதிர்பார்த்து காத்திருக்கும்
என் மனதை ஏற்க மறுக்கிறாய்
ஏனடி..............?
எங்கையோ இருக்கும்
முகம் பார்க்காத ஒருத்தனுக்கு
மாலையிட காத்திருக்கிறாய்
உன்னையே எதிர்பார்த்து காத்திருக்கும்
என் மனதை ஏற்க மறுக்கிறாய்
ஏனடி..............?
ஓ...
சோகக் கவிதைகள் இங்கே
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட
இது தானா காரணம்...?
சோதனைதான்
தொடரும் வேதனைதான்.
இங்கே...
யாரை யார் நொந்து கொள்வது...?
விதி எழுதிய கதை யாரறிவாரோ...?
இருப்பினும்
இறுதிவரை போராடு.
உன் மீது பித்தனாக இருந்தபோது
எல்லாம் நீ உணரவில்லை
ஆனால் இன்று புத்தனைப் போல
போதனைகள் சொல்கிறாய் என்னிடம்
எதிர்பார்க்காதே என்று...
No comments:
Post a Comment