Friday, June 25, 2010

இடைப்பட்ட வெளி

உனைக்குடித்து மயங்கி
இரவுகளில் பலநாள் இறந்திருக்கிறேன்.
தியானத்திற்கும் விழிப்பிற்கும்
இடைப்பட்ட வெளிதான் உன் நினைவு.
எவ்வளவு கரைத்தாலும் கரையாத
அந்த உன் ஒரு துளி நினைவுதான் இப்போதும்
உன் கைக்குச் சிக்கக்கூடிய ஜெடப்பொருளாய்
எனை வைத்துள்ளது.
தயவுசெய்து உயிர் கொடு
அல்லது
கரையாத உன் ஞாபகங்களை எடுத்துச்செல்

No comments:

Post a Comment